Monday 24 June 2013

பொறுப்பு யார் ஏற்பது?

பாவம் தொலைக்க சென்றவர்கள் சோகத்தில் மூழ்கிய அவலம்.

பாடம் கற்க தயாரா?

புனிதப்பயணங்கள் இன்று இன்பச்சுற்றுலாவாக மாறியதால் ஏற்பட்ட பாதிப்பா?
அல்லது
பாதுகாப்பற்ற பயணமுறையா?
அல்லது
பணம் சம்பாதிப்பதே ஒரே குறிக்கோளாக கொண்ட சுற்றுலா நிறுவனங்களா?
அல்லது
வரி கிடைத்தால் போதும், எதற்கும் அனுமதி கொடுக்கத்தயாராக இருக்கும் அரசாங்கங்களா?
அல்லது
இன்றைய சவுகரியங்களே நமக்கு முக்கியம், அடுத்த தலைமுறையினரை பற்றி நாம் ஏன் கவலைபடவேண்டும் எனும் மனநிலையா?
அல்லது 
பழைய நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கல்லாததா?

காரணம் எதுவாக இருப்பினும் நாம் கற்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.
























நேற்று தமிழகம் திரும்பிய பயணிகள் நிருபர்களிடம் பேசுகையில்; திடீரென மழை பெய்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடியதை பார்க்க முடிந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. நாலாபுறமும் சிதறி ஓடினோம். எங்கள் கண் முன்னே உறவினர் தண்ணீரில் இழுத்து செல்வதை பார்த்தோம். 5 நாட்கள் பெரும் அவதிப்பட்டோம். மின்சாரம் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை. சிலர் பட்டினியால் இறந்து போயினர். நாங்கள் இரவு , பகல் முழுவதும் கடும் குளிரில் பெரும் துயரப்பட்டோம். எங்களை சுற்றி பிணங்கள் கிடந்தன. பிணங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் என்றனர் கண்ணீருடன் .
-நன்றி தினமலர்.
படங்கள் msn.com


No comments:

Post a Comment