Friday 20 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

போன முறை ஆட்சியில் இருக்கும் போது பிடித்த எண் 9.
ஆனால் இம்முறை பிடித்தது 7ஆம் எண்.
அப்போ 40 இடங்களில் எப்படி போட்டியிடுவது?
34, 25, 16 அல்லது 7-ல் அல்லவா போட்டியிடவேண்டும்?
அல்லது தமிழகத்தை 43 தொகுதிகளாக்கப்பட்ட பின் போட்டியிடவேண்டும்.
இப்படிக்கு
நாங்க அப்பவே அப்படி, இப்ப...? குழுவினர்
மற்றும்
ஏழறை மட்டுமே பிடித்த மாக்கள்

உலகிலேயே கணணி மென்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள்.  அப்படி இருக்கும்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ரேஷன் கார்ட் renewal பண்ண முடியாமல் காலம் தாழ்த்துகிறது தமிழக அரசு.  இதுவும் மத்திய அரசின் சதித்திட்டமாக இருக்கமோ?
இப்படிக்கு
ஒரு அதிமுக மாங்கா

கணவருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்வதற்காக மரத்தான் ஓட்டத்தில் கலந்து ரூபாய் ஐந்தாயிரம் பரிசை தட்டிச்சென்ற அறுபத்தியாறு வயது லட்சியப்பெண். நாம எல்லாம் வலைத்தளங்களில் ஸ்டேடஸ் அப்டேட் செய்யவும் லைக் போடவுமே பிறந்தவர்கள்.  எனவே நாங்கள் மாங்காவும் இல்லை (வாழைப்)பழமுமில்லை.  களிமண்கள்!

அமலாகிறது கஸ்தூரிரங்கன் அறிக்கை: நடவடிக்கையை துவக்கியது மத்திய அரசு - இது தினமலர் செய்தி
கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைக்கான ஒப்புதல் ரத்து - இது தி இந்து செய்தி
யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கொள்ளவும்.  அனைத்துதரப்பு மக்களையும் திருப்திபடுத்துவது "ஊடகத்துறை"
இப்படிக்கு
நான் படித்ததே சரி என்று வாதாடுவோர் சங்கம்

No comments:

Post a Comment