Sunday 22 December 2013

நாம் மாங்காயா இல்லை (வாழைப்)பழமா?

திமுக-வின் ஊழலால் காங்கிரஸுக்கு அவப்பெயர் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.  அதாவது ஊழல் என்றாலே காங்கிரஸ்தான் என்று இருக்கும்போது திமுக ஊழல் செய்ததால் அது காங்கிரஸுக்கு அவப்பெயர்தானே!  முதல் முறை மனசாட்சிக்கு பயந்து உண்மையை பேசியுள்ள அமைச்சருக்கு காமன்வெல்த்தில் ஆரம்பித்து ஆதர்ஷ் வரையிலான ஒரு லட்சத்து எழுபத்தாயிரம் கோடி நன்றிகள்.

கட்சிக்காக இல்லாமல் நாட்டுக்காக ஓட்டளியுங்கள் என்று மோடி மும்பை மாநாட்டில் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.  அப்போ அந்த மோடி அலையெல்லாம் சும்மா டூப்பா?  வீடுதோறும் தாமரை என்றது கப்ஸாவா?

ஏமன் நாட்டில் தன் மகளை திருமணம் செய்ய ஃபேஸ்புக்கில் பத்து லட்சம் லைக்ஸ் வாங்கிவந்தால்தான் சம்மதிப்பேன் என்று ஒரு ஹை-டெக் தந்தை அறிவித்துள்ளதால் மணமகன் பாடு படு திண்டாட்டமாகிவுள்ளது.  செத்தாண்ட சுகுமாரு!

அண்மையில் தென்னாப்ரிக்கா மற்றும் கென்யா பயணம் செய்த இலங்கை அதிபர் தன் சகாக்களுடன் துபாய் வழியாக இலங்கைக்கு பயணம் செய்தபோது துபாய் ட்யூட்டி ஃப்ரீ-யிலிருந்து ஒரு CCTV காமெராவை திருடியவரை காவலர்கள் பிடித்து விசாரித்ததில் அவர் ராஜபக்சேவின் குழுவில் இடம்பெற்ற காமெராமேன் என்பது தெரியவந்துள்ளது.  அவரை எச்சரிக்கை செய்து துபாய் விமான நிலைய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.  ரத்தவெறி பிடித்த திருட்டு பயல்கள்போல!

தமிழர் வரலாற்றில் பிரணாப் முகர்ஜிக்கு மன்னிப்பே கிடையாது என்று "அரசியல் திலகம்" வைகோ கூறியுள்ளார்.  எனவே இவர் பாஜக-வோடு கூட்டணி வைத்து பாவமன்னிப்பு தேடுகிறாரோ?
இப்படிக்கு
அரசியல் திலகம் வைகோ பாசறை

No comments:

Post a Comment