Wednesday 19 March 2014

தேர்த்தல் 2014 - தமிழகம் - ஒரு அலசல்

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்த்தல்களிலேயே இந்த தேர்த்தல் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.

பொதுவாக பாராளுமன்றத்துக்கு நடக்கும் தேர்தலில் தேசிய கட்சிகளின் கை ஓங்கியிருப்பது மாறி மாநில கட்சிகள் அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்துவிட்டன.

* பாஜக + பமக + தேமுதிக + மதிமுக
* காங்கிரஸ்
* கம்யூனிஸ்ட்
* அதிமுக
* திமுக + விடுதலை சிறுத்தைகள் + புதிய தமிழகம் + இந்திய தேசிய முஸ்லீம் லீக்   + மனிதநேய மக்கள் கட்சி
* ஆம் ஆத்மி கட்சி

பொதுவாகவே காங்கிரஸ்ஸோடு கூட்டணி வைத்துக்கொள்ள யாருமே தயாராக இல்லை என்பதே நிதர்சன உண்மையாகி உள்ளது.  இதற்கு முக்கிய காரணம், அதை தலைமையேற்க ஒரு கவர்ந்திழுக்கும் தலைமை இல்லாததே. அடுத்து இக்கட்சியில் யாரும் தன்னை தொண்டனாக கருதாமல் அனைவரும் தன்னையே தலைவனாக கருதுவதுதான்.

தமிழகத்தில் தமிழருவி மணியன் ஏற்படுத்திய ஒரு அணிதான் "பாஜக + பமக + தேமுதிக + மதிமுக".  இந்த கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்தோ கொள்கையோ இல்லை. மதிமுகவுக்கு இலங்கை தமிழர்களை விட்டால் வேறு ஏதும் கொள்கை இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜகவின் நிலையோ நேரெதிரானது.  இதிலுள்ள தேமுதிகவுக்கோ தங்களுடைய எம்.எல்.ஏ-க்களையே பாதுகாக்க முடியவில்லை.  இனி எம்.பி-க்களை வைத்துக்கொண்டு என்ன பாடுபடப்போகிறாரோ?  ராமதாஸ் விஜயகாந்தையும் அவரின் படங்களையும் எதிர்த்ததுபோல அம்மாவும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி கை குலுக்குவதே நடக்காத ஒன்றாகும் போது இவர்கள் எப்படி ஜெயிப்பது?

அடுத்து தனித்துவிடப்பட்ட கம்யூனிஸ்ட்.  இவர்களில் எல்லோருமே அடிமட்ட தொண்டர்களாகவே இருந்துவிட்டதால் இவர்களை யாருமே தலைவர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.  பாவம் அவர்களும் விரட்டி அடித்தவர்களை பற்றி ஒரு வார்த்தையும் பேசமாட்டேங்கிறார்கள்.

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு சிறு கோடே எல்லையென்பதை இன்றும் புரிந்துக்கொள்ள மறுக்கும் ஒரு தலைமையை கொண்ட அதிமுக.  அம்மா பிரதமரானால் இந்தியா முழுவதும் "அம்மாஜி" மெஸ் ஆரம்பித்து பூரி பாஜி சப்ளை நடக்கும்.  உலக வங்கி அதிகாரி "mammy" காலில் விழ பன்னீர்செல்வத்திடம் ட்யூஷன் போகவேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்தில் பெண்கள் பிறிவின் குத்தாட்டம் பார்க்கவேண்டியிருக்கும்.  அதுவும் இல்லையென்றால் ஆசிட் முகத்தில் வீசப்படும், ஜாக்கிரதை!

வந்தாரை வாழவைக்கும் அல்லது வந்தாரை வைத்து வாழ நினைக்கும் நிலையில் அடுத்த கூட்டணி.  இதுவரை வந்தவரனைவருக்கும் அவர்கள் மனம் குளிரும்படி சீட் ஒதுக்கி மேலும் யாருடனும் "கை" கோர்த்து "உண்டி" குலுக்க தயார் நிலையில் இருக்கிறது இந்த அணி.

ஆம் ஆத்மி கட்சியை பற்றி பேசவேண்டுமானால் அதன் தலைவருக்கு மற்ற கட்சி தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதே வேலையாகிவிட்டது. டெல்லியில் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் "விலகி ஓடியதை" யாரும் மறக்காத நிலையில்,  ஞானியையும் உதயகுமாரையும் வைத்துக்கொண்டு எத்தனை சதம் ஓட்டுக்களை பிரிக்கப்போகின்றனர் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த தேர்த்தலில் ஊழல் என்பதை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் நாம் யாருக்கும் வாக்களிக்க முடியாது.  ஏனெனில் எந்த கட்சிக்கும் அடுத்தவரை ஊழல் குற்றம் சாட்ட எந்த வித தார்மீக பொருப்புமில்லை.

இந்த தேர்த்தலில் மதசார்பின்மை என்பதை அளவுகோலாக வைத்து பார்த்தால் அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும்.  ஏனெனில் அனைவரும் தங்களை மதசார்பற்றவராகவே காட்டிக்கொள்கின்றனர்.

வளர்ச்சி என்று பார்த்தால், விலைவாசிதான் வளர்ந்துள்ளது.  அதைத்தவிர மற்ற வளர்ச்சியெல்லாம் அதுவாக வளர்ந்ததுதான்.  இதற்கு யாரையும் பொருப்பேற்க சொல்ல முடியாது.  மறைந்த பிரதமர் நரசிம்ம ராவால் அறிமுகப்படுத்தப்பட்ட நம் இன்றைய பிரதமர் தன்னுடைய குருவைப்போலவே வாய் மூடி மௌனம் காத்துக்கொண்டிருக்கின்றார். எதிர்கட்சிகளோ வெரும் சத்தம் மட்டும் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.  இந்த சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவேயில்லை என்பதுதான் உண்மை. நான் சும்மா கத்துவது போல நடிக்கிறேன் நீ செய்ய வேண்டியதையெல்லாம் செய்து எனக்கு சேரவேண்டியதை சரியாக கணக்கு பார்த்து செட்டில் செய்துவிட்டால் போதும் என்றே எதிர்கட்சிகள் நடந்துகொள்கின்றன.