Saturday 11 April 2015

"தருத"லை-க்கு ஒரு விளக்கம்

கடந்த சில நாட்களாக தமிழ் வலைத்தளங்களில் எங்கெல்லாம் திரு நரேந்திர மோடி அவர்களை பற்றி "உண்மையான" விஷயங்கள் வெளிவருகின்றனவோ அங்கெல்லாம் ஒரு போலி பெயருடன் வந்து பின்னூட்டம் எனும் பெயரில் விஷத்தை கக்கிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் மோடிஜியின் ஆதரவாளர்கள்.  இதில் முக்கிய பங்களிப்பை கொடுப்பது taruada/taru என்கின்ற fake id.  இது தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இண்டெர்நெட்டை மிகவும் துல்லியமாக பயன்படுத்தி படித்தவர்களின் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்தி தாங்களே எதிர்ப்பார்க்காத ஒரு அசுர வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது பாஜக.  இப்போது ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் ஆன பிறகு "பல் இளிக்குமாம் பித்தளை" என்பதை போன்று, நடப்பது ஒரு காங்கிரஸ் பினாமி ஆட்சி என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளனர்.
மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகிவிடும்.  வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரப்பட்டு, இந்தியர் அனைவருக்கும் பல லட்சங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றெல்லாம கூறிவிட்டு, இப்போது மானியத்தை விட்டு கொடுங்கள், பௌர்ணமியன்று விளக்குகளை அணைத்துவிடுங்கள், நாங்கள் விவசாயிகளின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு நில அபகரிப்பு மசோதாவை அவசரச்சட்டமாக பிறப்பிப்பது, பதவியேற்ற பத்து மாதங்களில் மோடி மற்றும் மந்திரிகளின் பயணச்செலவு மட்டும் 300 கோடிகளுக்கும் மேல், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் இவர்களின் சாதனைகளை.  அது போக  இப்போது தாஜ்மகாலை இடிக்க வேண்டுமாம்.  அங்கே சிவன் கோயிலை கட்டப்போறாங்களாம். டேய்... அது மயானம்டா... ரெண்டு பேர புதைத்த இடம்டா...
பழைய ஹோட்டல்களில் "இது இந்த ஹோட்டலில் திருடியது" என்று தங்களின் பாத்திரங்களில் பொறித்து வைத்திருந்தார்கள்.  அதுபோல இப்போது மோடி அவர்கள் தான் அணியும் கோட்டில் தன்னுடைய பெயரை போறித்துக்கொண்டு அணிந்துகொள்கிறார்.  நேற்று ஃப்ரான்ஸுக்கு சென்றபோதும் தன்னுடைய ஷாலில் தன் பெயரை NM என்று பொறித்துள்ளார்.

டோல் ஃப்ரீ நம்பருக்கே மிஸ்டு கால் கொடுக்க கற்றுத்தந்த இவர்களால்தான் நாம வல்லரசாகப்போறோமா?

எனவே வலைத்தள நண்பர்களே, தரு அல்லது தருட அல்லது தருதலை என எந்த பெயரிலும் வரும் பின்னூட்டங்களை நாம் புறக்கணிப்போம்.  இது அவர்களாகவே தங்களின் மீது வீசிக்கொள்ளும் சேறு என்பதை நாம் புரிந்துக்கொள்வோம்.

Friday 3 April 2015

BIG JOKERS PARTY எனும் பிஜேபி!

ஏப்ரல் 1, 2015 முதல் சிகரேட் பாக்கெட்டுகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை படங்களாகவும் எழுத்து மூலமாகவும் பிரசுரித்து விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.  ஆனால் மார்ச் 31-ஆம் நாள் பிஜேபியின் மக்களவை உறுப்பினர் "புகை பிடிப்பதால் கேன்சர் ஏற்படுகிறது என்று இந்தியாவில் எந்தவிதமான ஆராய்ச்சிகளும் செய்து நிரூபிக்கப்படாத நிலையில், சிகரேட் பாக்கெட்டுகளில் பிரசுரிக்கப்படும் படங்கள் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்.

பின்னர் இரண்டு நாட்கள் கழிந்து மற்றொரு எம் பி "சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமான சர்க்கரையை தடை செய்ய கோருவார்களா?" என்று மிகவும் அறிவுப்பூர்வமான வாதத்தை வைத்து சிகரேட் பாக்கெட்டில் படங்களை பிரசுரிக்க தேவையில்லை என்று மறைமுகமாக தெளிவுபடுத்துகிறார்.

இன்று மற்றுமொரு பிஜேபி எம்பி  தனக்குத்தெரிந்த ஒருவர் தினமும் ஒரு பாட்டில் மதுவும் 60 சிகரேட்டும் ஊதித்தள்ளுகிறார்.  அவருக்கு கேன்சரோ அல்லது வேறு கோளாறோ ஏற்படவில்லை. எனவே புகைபிடித்தால் கான்சர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று லூஸுத்தனமாக யாரும் பேசவேண்டாம் என்று சொல்லவருகிறார்.

வரும் நாட்களில் இன்னும் யார்யார் என்னென்ன வியாக்கியானம் சொல்ல இருக்கின்றார்களோ தெரியவில்லை.  இந்தியர்களாகிய நாம் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் நோக்கம் இப்படி பெரும் முதலாளிகளுக்கு தொண்டு செய்து தங்களை வளர்த்துக்கொள்ளவா?

எனக்குத்தெரிந்து ஒருவர் விஷம் சாப்பிட்டும் சாகாமல் உயிரோடிருக்கிறார். எனவே விஷம் அறிந்தினால் யாரும் சாகமாட்டார்கள் என்று சொல்லிவிடலாமா?

அதேபோல் மாட்டுக்கறி சாப்பிடும் யாரும் இறந்துவிடவில்லை.  பின்னர் ஏன் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவற்றை அறுத்து விற்க தடை செய்து உள்ளார்கள்?

நாள் தவறாமல் சாராயம் குடித்து உயிரோடிருந்து, தன் குடும்பத்தினரை தினம் தினம் கொன்றுக்கொண்டிருக்கும்போது, ஏன் மதுவிலக்கை குஜராத்தில் அமுல்படுத்தியுள்ளார்கள்?

இப்படியெல்லாம் கேணத்தனமாக பேசியதாலேயே மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் டில்லி மற்றும் கஷ்மீர் மக்கள் இவர்களை கை விட்டுவிட்டனர்.  மேலும் இப்படியே உளறிக்கொண்டிருந்தால் வரும் ஆண்டு நடக்கவிருக்கும் மாநில தேர்தல் அனைத்திலும் சங்குதான் போல!